என் மலர்
உள்ளூர் செய்திகள்

சுங்கச்சாவடி மேற்பார்வையாளரை தாக்கிய பா.ம.க. நகர செயலர் உள்பட 8 பேர் மீது வழக்கு
- சுங்கச்சாவடி மேற்பார்வையாளரை தாக்கிய பா.ம.க. நகர செயலர் உள்பட 8 பேர் மீது வழக்கு பதியபட்டுள்ளது.
- பலத்த காயமடைந்த வெங்கடேசன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
அரியலூர்:
உடையார்பாளையம் அடுத்த தத்தனூர் கீழவெளி பட்டியடி தெருவைச் சேர்ந்த சின்னதுரை மகன் வெங்கடேசன்(வயது33). மணகெதி சுங்கச்சாவடியில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு சுங்கச்சாவடியை கடக்க முயன்ற காரில் உள்ளவர்களிடம் சுங்கக் கட்டணம் கேட்டுள்ளார்.அப்போது அந்த காரில் இருந்த பா.ம.க. அரியலூர் நகரச் செயலர் விஜி, அக்கட்சியை சேர்ந்த கோவிந்தபுரம் நந்தகுமார், காட்டுப்பிரிங்கியத்தை சேர்ந்த கருணாநிதி மகன் முத்து உள்பட 8 பேர் சேர்ந்து, எங்க காரையே மறிக்கிறாயா என கூறி தகாத வார்த்தையால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனர். இதில் பலத்த காயமடைந்த வெங்கடேசன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து புகாரின் பேரில், வெங்கடேசனை தாக்கிய மேற்கண்ட 8 பேர் மீதும் உடையார்பாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






