என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் ரத்ததான முகாம்
- அரியலூர் அரசு கலைக் கல்லூரி
- கல்லூரியில் ரத்ததான முகாம்
அரியலூர், அக். 13-
அரியலூர் அரசு கலைக் கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட்கி ராஸ் மண்டலம் மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அரியலூர் மாவட்ட கிளை இணைந்து ரத்ததான முகாம் அரசு கலைக்கல்லூரியில் நடை பெற்றது.
தஞ்சை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் தனராஜ், பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பா ளர் வெற்றிவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர்.
இந்த முகாமில் அரசு கல்லூரி முதல்வர் டோமி னிக் அமல்ராஜ், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் அரியலூர் மாவட்ட தலை வர் ஜெயராமன், பொருளா ளர் எழில், துணைத் தலை வர் சந்திரசேகர், வட்டார மருத்துவ அலுவலர் கா ர்த்திகா, முன்னாள் மாவட்ட தலைவர் நல்லப்பன், நிர் வாக குழு உறுப்பினர்கள் வக்கீல் செல்வராஜ், நமச்சி வாயம், சத்யமூர்த்தி, அசோக்குமார், சக்கரவர்த்தி, மற்றும் கல்லூரியின் தாவர வியல் துறை பேராசிரியர்கள் ஜெயக்குமார், சேட்டு, தண்டபாணி, கௌரவ விரிவுரையாளர்கள் ராஜ்குமார், சிவலிங்கம், தாண்டவ மூர்த்தி, தமிழ் குமரன், தமிழ் துறை தலை வர் இளையராஜா, கல்லூரி கண்காணிப்பாளர் ஆரோ க்கியமேரி சுகாதார மேற்பா ர்வையாளர் சைமன் ஆகியோர் கலந்து கொண்ட னர்.
அரியலூர் அரசு மருத்து வக் கல்லூரியின் ரத்த வங்கி மருத்துவர் சந்திரசேக ரன் தலைமையில் மருத்துவக் அலுவலர்கள் குழு மேற்பா ர்வையில் முகாம் நடை பெற்றது. இதில் 50 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது.
அரியலூர் அரசு கலை க்கல்லூரியின் திட்ட அலுவ லரும் மாவட்ட ஒருங்கிணை ப்பா ளருமான பேராசிரியர் ஸ்டீபன் ஏற்பாடு செய்து இருந்தார்.
ரத்ததனா முகாம் நடைபெற்ற போது எடுத்தப்படம்.






