என் மலர்
உள்ளூர் செய்திகள்

பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
- பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- பேராசிரியர் குழுவை கண்டித்து நடைபெற்றது
அரியலூர்:
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 14 -ம் தேதி நடைபெற்ற பருவத்தேர்வில், முதுகலை வரலாறு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கேள்வித் தாளில் தமிழ்நாட்டில் தாழ்ந்த சாதி எவை என்று கேட்கப்பட்டிருந்தது. இதை கண்டித்தும், மாணவர்கள் இடையே சாதி உணர்வை தூண்டும் பல்கலைக் கழக நிர்வாகம் மற்றும் வினாத்தாளில் தொடர்பில்லாத வார்த்தையை உருவாக்கிய பேராசிரியர் குழுவை கண்டித்தும், பல்கலைக் கழக துணைவேந்தர் மற்றும் தொடர்புடைய அனைவரும் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவர் அய்யப்பன் கண்டன உரையாற்றினார். பட்டியலின மாவட்ட நிர்வாகி சத்தியமூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.
Next Story






