என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் பெரிய வெள்ளி வழிபாடு
    X

    ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் பெரிய வெள்ளி வழிபாடு

    • ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் பெரிய வெள்ளி வழிபாடு நடைபெற்றது
    • பங்கு தந்தை அதிபர் தங்கசாமி, உதவி பங்குத்தந்தை ஞான அருள்தாஸ் ஆகியோர் சிறப்பு திருப்பலி நிறைவேற்றினர்.

    திருமானூர்:

    அரியலூர்மாவட்டம் திருமானூர், திருக்கருக்காவூர் எனும் ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் புனிதவெள்ளி வழிபாடு நடைபெற்றது.இயேசு உயிர்விட்ட துக்கநாளான பெரியவெள்ளியான நேற்று மாலை ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் பங்கு தந்தை அதிபர் தங்கசாமி, உதவி பங்குத்தந்தை ஞான அருள்தாஸ் ஆகியோர் சிறப்பு திருப்பலி நிறைவேற்றினர். அப்போடு, திருச்சிலுவை மரம் இதுவே. இதிலேதான் தொங்கியது. உலகத்தின் ரட்சண்யம் என்று பாடியபடி பாடுபட்ட இயேசுவின் சொரூபத்தை பொதுமக்கள் பார்வைக்கு காட்டினர். இதனை தொடர்ந்து பாடுபட்ட சொரூபத்திற்கு வணக்கம் செலுத்தி இயேசுவின் பாதத்தில் கிறிஸ்தவர்கள் முத்தமிட்டனர். அதன் பின்னர் சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது. பெரிய வெள்ளி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×