என் மலர்
உள்ளூர் செய்திகள்

வங்கி பணியாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்
- அரியலூர் தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
- கூட்டுறவு சங்கங்களில் வேளாண் கருவிகள் வாங்க வலியுறுத்தும் நடவடிக்கை யைக் கண்டித்து, போராட்டம்
அரியலூர்,
கூட்டுறவு சங்கங்களில் வேளாண் கருவிகள் வாங்க வலியுறுத்தும் நடவடிக்கை யைக் கண்டித்து, அரியலூர் மாவட்டத்தில் அச்சங்கப் பணியாளர்கள் விடுப்பெ டுத்து போராட்டத்தை தொடங்கினர்.அனைத்து கூட்டுறவு சங்கங்களும் ரூ.10 லட்ச த்துக்கு குறையாமல் வேளா ண் கருவிகள் வாங்க வேண் டும் என்று தமிழக அரசு அறிவிப்பு சங்கங்களுக்கு கூடுதல் நிதிச் சுமையை ஏற்படும்,நலிவடைந்த சங்கங்கள் இழுத்து மூடப்படும் நிலை ஏற்படும். இந்த நடவடி க்கையை கைவிட வேண்டும். இது ஏற்கப்படாவிட்டால் அனைத்து சங்கங்களிலும் தற்போது கொள்முதல் செய்யப்பட்டுள்ள கருவி களை இணைப் பதிவாளர் அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டு,
சங்க பணியாளர்கள் அனைவரும் தொடர் விடு ப்பு எடுத்து போராட்டம் நடத்துவோம் என்று தமி ழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர்அ றிவித்திருந்தனர்.அதன்படி அரியலூர் மாவட்டத்தில் 64 கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றி வரும் 400 பணியாளர்கள் விடுப்பெடுத்து போரா ட்டத்தை தொடங்கினர்.அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டிருந்த பணி யாள ர்கள் கோரிக்கைகளை வலிறுத்தி பேசினர்.பின்னர் அவர்கள் அங்கி ருந்து ஊர்வலமாக சென்று, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதி வாளர் தீபாசங்கரிடம் தங்க ளது கோரிக்கை மனு மற்றும் அலுவலக சாவி களை ஒப்படைத்து விட்டுச் சென்றனர்.போராட்டத்துக்கு அரியலூர் மாவட்டத் தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். செயலர் தமிழ்மணி முன்னிலை வகித்தார். கூட்டுறவு சங்க பணியாளர்க ளின் போராட்டத்தினால் விவசாய மற்றும் நகைக் கடன் வழங்கும் பணி, உரம், பூச்சி மருந்து விநியோகம் மற்றும் அதன் சார்பு பணிகள் அனைத்து பாதிக்க ப்பட்டன.






