என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் விழிப்புணர்வு ஓட்டம்
- ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் விழிப்புணர்வு ஓட்டம் நடந்தது.
- 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்றது
அரியலூர்:
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒற்றுமை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அரியலூரில் ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது. திருச்சி முதுநிலை கோட்ட பாதுகாப்பு கமிஷனர் ராமகிருஷ்ணன் உத்தரவின்படி, அரியலூர் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவகுமார், முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த ஓட்டத்தை அரியலூர் மாவட்ட போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு வெங்கடேசன் தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்டவர்கள் அரியலூர் ரெயில் நிலையத்தில் இருந்து கல்லூரி சாலை, செந்துறை சாலை, பஸ் நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, பொதுமக்களிடம் நாட்டின் ஒற்றுமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் ரெயில்வே பாதுகாப்பு படையினர், ெரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்."






