என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரியலூர் மாவட்டத்தில் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு
- அரியலூர் மாவட்டத்தில் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது
- இன்ஸ்பெக்டர் கோபிநாத் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கினார்
அரியலூர்,
அரியலூர் அடுத்த எருத்துக்காரன்பட்டி ஊராட்சியில் காவல் துறை சார்பில் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் கோபிநாத் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கினார். மேலும் கள்ளச்சாராயம், சட்ட விரோத மதுபான விற்பனை, கஞ்சா பழக்கம் மற்றும் விற்பனை குறித்த தகவல்களை உடனடியாக காவல் நிலையத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், போலீசார் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் செந்துறை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமை வகித்து போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி பேசினார். தொடர்ந்து அவர் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதில் உதவி ஆய்வாளர்கள் பிரபாகரன், சாமிதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






