என் மலர்
உள்ளூர் செய்திகள்

தாயை தாக்கியவர் கைது
- தாயை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
- சொத்து தகராறில் நடந்த சம்பவம்
அரியலூர்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தத்தனூர் மேலக்கொட்டா கிராமத்தை சேர்ந்தவர் மல்லியம்மாள் (வயது 80), இவருக்கும் அவரது மகன் கருணாநிதிக்கும் சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த கருணாநிதி தனது தாயாரை தகாத வார்த்தைகளால் திட்டி உருட்டுக் கட்டையால் தலையில் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மல்லியம்மாளை அருகே இருந்தவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருணாநிதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






