என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரியலூரில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- அரியலூரில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
அரியலூர்:
அரியலூர் அண்ணா சிலை அருகே அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். ரூ.9 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணிக்கொடை ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிடவேண்டும்.
காலை சிற்றுண்டியை சத்துணவு திட்டத்துடன் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராஜாவேம்பு தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் எம்.கே.ஷேக்தாவூத் தொடக்க உரையாற்றினார். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் கி.காந்தி, மாவட்டப் பொருளாளர் கே.ஆனந்தவள்ளி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் என்.வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.






