என் மலர்
உள்ளூர் செய்திகள்

அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
- பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- காலி பணியிடங்களை நிரப்ப கோரி கோஷம்
அரியலூர்,
அரியலூர் பேருந்து நிலையம் அண்ணாசிலை அருகில் அங்கன் வாடி ஊழியர்கள் உதவியாளர்கள் சங்கத்தினர் மாவட்ட தலைவி ஜோதிலெட்சுமி தலமையில் சிஐடியூ மாவட்ட தலைவர் சிற்றம்பலம் முன்னிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும், பதிவேடு முறை அல்லது கைப்பேசி முறை இவற்றில் ஒன்றை மட்டும் நடைமுறைபடுத்த வேண்டும், 10 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் பிரதான மையங்களை சிறிய மையமாக்குவதையும், 5 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் சிறிய மையங்களை பிரதான மையத்தோடு இணைக்கும் திட்டத்தையும் கைவிட வேண்டும், அங்கன்வாடி பணியாளர்களுக்கு கூடுதல் பொறுப்பாக 2 அல்லது 3 மையங்கள் சேர்த்து பார்ப்பதால் மன உளைச்சல் ஏற்படுகிறது. அதனை சரி செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
Next Story






