என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அனைத்து சான்றிதழ்கள் வழங்கும் சிறப்பு முகாம்
    X

    பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அனைத்து சான்றிதழ்கள் வழங்கும் சிறப்பு முகாம்

    • பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அனைத்து சான்றிதழ்கள் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது
    • பள்ளி கல்வி மற்றும் வருவாய் துறை சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது.

    அரியலூர்,

    நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் பள்ளி கல்வி மற்றும் வருவாய் துறை சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது. ஆண்டிமடம் அரசு மேல்நிலைப்பள்ளி, அரியலூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, ஜெயங்கொண்டம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, செந்துறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, தா.பழூர் அரசு மேல்நிலைப்பள்ளி, திருமானூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 6 பள்ளிகளில் இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது. பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தேவையான சாதி சான்றிதழ், வாரிசு சான்றிதழ், ஆதார் அட்டை, இருப்பிடச் சான்று, பான் கார்டு, ரேஷன் கார்டு, பிறப்புச் சான்றிதழ், மாற்றுத்திறனாளி சான்று, வருவாய்ச் சான்று மற்றும் அவர்களுக்கு தேவையான அனைத்து வழங்கப்பட்டது. இந்த முகாமில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி, வருவாய்க் கோட்டாட்சியர்கள் ராமகிருஷ்ணன், பரிமளம், கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×