என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுவர்களுக்கு புகையிலை, குட்கா விற்பனை செய்தவர் கைது
    X

    சிறுவர்களுக்கு புகையிலை, குட்கா விற்பனை செய்தவர் கைது

    • சிறுவர்களுக்கு புகையிலை, குட்கா விற்பனை செய்தவர் கைது செய்யபட்டார்
    • பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களின் மதிப்பு 6 ஆயிரம் ரூபாய் என்று போலீசார் தெரிவித்தனர்.

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீஸ் எஸ்.ஐ. திருவேங்கடம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் புகையிலை மற்றும் குட்கா விற்பனை நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடரந்து அங்கு விசாரணை நடத்த சென்றபோது த.குடிகாடு கீழத்தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் ரவி(வயது 52)என்பவர் போலீசாரை கண்டு ஓட முயன்றுள்ளார், அவரை பிடித்து விசாரணை செய்த போது 15 வயது சிறுவர்களுக்கு புகையிலை மற்றும் குட்கா விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிந்த போலீசார் ரவியை கைது செய்துஅவர் விற்பனைக்காக வைத்திருந்த 6.5 கிலோ புகையிலை, 2.3 கிலோ குட்கா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களின் மதிப்பு 6 ஆயிரம் ரூபாய் என்று போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×