search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபருக்கு 11 ஆண்டு சிறை தண்டனை
    X

    காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபருக்கு 11 ஆண்டு சிறை தண்டனை

    • காதலித்த பெண்ணை திருமணம் செய்த மறுத்த வாலிருக்கு 11 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது
    • பெண்ணை 6 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் வலுக்கட்டாயமாக பாலியல் துன்புறுதலுக்கு ஆளாக்கி உள்ளார்

    அரியலூர்:

    ஆண்டிமடம் அருகேயுள்ள சாதனப்பட்டு கிராமம் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் அருமைநாதன் மகன் ஆனந்தராஜ்(வயது 27). இவர் அப்பகுதியைச் சேர்ந்த பெண்ணை 6 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த 2016-ம் வருடம் வலுக்கட்டாயமாக பாலியல் துன்புறுதலுக்கு ஆளாக்கி உள்ளார். இதையடுத்து அந்த பெண், தன்னை திருமணம் செய்துக் கொள்ளும்படி கேட்டபோது, ஆனந்தராஜ் மறுத்ததுடன் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து புகாரின் விசாரணை மேற்கொண்ட ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து ஆனந்தராஜை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளி ஆனந்தராஜ்க்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார். இதையடுத்து ஆனந்தராஜ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அரசு தரப்பில் வழக்குரைஞர் ம.ராஜா ஆஜராகி வாதிட்டார்.

    Next Story
    ×