என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதாவினர் 99 பேர் கைது
- ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதாவினர் 99 பேர் கைது செய்யப்பட்டனர்
- திருமண மண்டபத்தில் அடைத்து மாலை விடுவித்தனர்.
அரியலூர்
திருச்சி புத்தூர் பகுதியில் மனமகிழ் மன்றம் தொடங்கப்படுவதை கண்டித்து திருச்சி மாநகர், மாவட்ட பா.ஜ.க. சா ர்பில் புத்தூர் நால்ரோடு பகுதியில சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அவதூறாக பேசியதாக கூறி திருச்சி மாநகர், மாவட்ட பா.ஜ.க. தலைவர் ராஜசேகரன் உள்ளிட்ட 9 நிர்வாகிகளை உறையூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த கைது சம்பவத்தை கண்டித்து, அரியலூர், அறந்தாங்கி, கந்தர்வக்கோட்டை ஆகிய பகுதிகளில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டத்தில் 5 இடங்களில் பா.ஜ.க. வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் ஜெயங்கொண்டம் நான்குச் சாலை சந்திப்பு பகுதியில் மாவட்டத் தலைவர் அய்யப்பன் தலைமையில் நடைபெற்ற சாலை மறியலில் 24 பேரை போலீசார் கைது செய்தனர். திருமானூரில் ஒன்றியத் தலைவர் சுரேஷ் தலைமையில், மேற்கு ஒன்றிய துணை தலைவர் வடமலை, ஒன்றிய துணை செயலர் தனபால், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டச் செயலர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலையில் மறியலில் ஈடுபட்ட 16 பேரை திருமானூர் காவல் துறையினர் கைது செய்தனர். இதே போல் செந்துறையில், ஒன்றிய தலைவர் புயல்.செல்வம் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 28 பேரையும், தா.பழூரில் ஒன்றியத் தலைவர் அரங்கநாதன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 16 பேரையும், ஆண்டிமடத்தில் மறியலில் ஈடுபட்ட ஒன்றியத் தலைவர் நீலமேகம் உள்பட 15 பேரையும் காவல்துறையினர் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.






