என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரியலூரில் 91 மில்லி மீட்டர் மழை பதிவு
- அரியலூரில் 91 மில்லி மீட்டர் மழை பதிவு ஆனது
- அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருகிறது
அரியலூர்,
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருகிறது.
நேற்று காலை முதல் இன்று காலை 8.30 மணி வரை அரியலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக செந்துறை பகுதியில் 20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் அரியலூரில் 5.5, திருமானூரில் 5.2, கருவாடியில் 11, சித்தமல்லி அணைக்கட்டு பகுதியில் 15.2, ஜெயங்கொண்டம் 19.6,ஆண்டிமடத்தில் 14.5 என மொத்தம் மாவட்டம் முழுவதும் 91 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
Next Story






