என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுபானம் விற்ற மூதாட்டி உட்பட 5 பேர் கைது
    X

    மதுபானம் விற்ற மூதாட்டி உட்பட 5 பேர் கைது

    • மதுபானம் விற்ற மூதாட்டி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்
    • போலீசாருக்கு வந்த தகவலின்படி நடவடிக்கை

    அரியலூர்:

    அரியலூர் அருகே ஓட்டக்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளிமாநில மதுபானங்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று அங்கு மதுபானங்களை விற்றுக் கொண்டிருந்த 5 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஓட்டக்கோவில், காலனித் தெருவைச் சேர்ந்த கந்தசாமி மனைவி மதியழகி(வயது 60), இவரது மகன்கள் இனிக்கும் சேட்டு, கோல்டு வினோத், உறவினர்கள் ராயம்புரம் காலனித் தெருவைச் சேர்ந்த அர்ச்சுணன் மகன் பிரகஷ்பதி மற்றும் விஷ்ணு ஆகியோர் அப்பகுதிகளில் வெளிமாநிலத்தில் இருந்து மதுபானங்களை கடத்தி வந்து, கூடுதல் விலைக்கு விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து காவல் துறையினர் வழக்குப் பதிந்து அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 400 மதுபான பாட்டில்கள் மற்றும் கார், இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×