search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபருக்கு 4 ஆண்டுகள் சிறை
    X

    வாலிபருக்கு 4 ஆண்டுகள் சிறை

    • வாலிபருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது
    • பாலியல் தொந்தரவு வழக்கில்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே பெண்ணுக்கு பாலி யல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூர் மகளிர் நீதிம ன்றம் தீர்ப்பளித்தது.

    உடையார்பாளையம் அருகேயுள்ள பரணம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் இளையராஜா(வயது25). கடந்த 2021 ஆம் ஆண்டு இவரை, பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு வழக்கி ல் ஜெயங்கொண்டம் அனை த்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்ற த்தில் நடைபெற்று வந்தது. இதனை விசாரித்த நீதிபதி செல்வம், குற்றவாளி இளையராஜாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்ட னையும், ரூ.5,000 அபராத மும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து குற்றவாளி இளையராஜா திருச்சி மத்திய சிறையில் அடைக்க ப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரை ஞர் ம.ராஜா ஆஜராகினார்.

    Next Story
    ×