search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபருக்கு 23 ஆண்டுகள் சிறை
    X

    வாலிபருக்கு 23 ஆண்டுகள் சிறை

    • வாலிபருக்கு 23 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டது
    • சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு

    அரியலூர்:

    அரியலூர் அருகே சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 23ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அரியலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    அரியலூர் அடுத்த கல்லமேடு கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மகன் அஜித்(வயது19). இவர், கடந்த 2020 ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், அரியலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு, போக்சோ சட்டத்தில் அஜித்தை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்ற நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் மாணவியை கடத்தியதற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், போக்சோ வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், குழந்தை திருமண வழக்கில் ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து இதனை ஏக காலதத்திற்கு அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.

    Next Story
    ×