என் மலர்
உள்ளூர் செய்திகள்

மது விற்ற 2 பெண்கள் கைது
- மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது
- மது விற்ற 2 பெண்போலீசாரின் ரோந்து பணியில் சிக்கினர்கள் கைது
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சோழங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த முருகதாசின் மனைவி அமுதா (வயது 47), அதே பகுதியில் வசிக்கும் சின்னதுரையின் மனைவி அம்சவெள்ளி(47) ஆகியோர் அப்பகுதியில் சட்டவிரோதமாக டாஸ்மாக் மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து அமுதா, அம்சவெள்ளி ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Next Story






