என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மது விற்ற 2 பேர் கைது
    X

    மது விற்ற 2 பேர் கைது

    • மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று கண்காணிக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கல்லாத்தூர் பகுதியில் பதுக்கி வைத்து மது விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அங்கே ஒருவர் மது விற்றது தெரியவந்தது. அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் அவர், வெட்டியார்வெட்டு இந்திரா காலனியை சேர்ந்த கலியபெருமாள்(வயது 48) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவர் விற்பனைக்காக வைத்திருந்த 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

     இதேபோல் உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது உடையார்பாளையம் தெற்கு தெருவை சேர்ந்த ராஜேஸ்வரன்(55) என்பவர், அப்பகுதியில் மது பாட்டிகளை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து ராஜேஸ்வரனை கைது செய்து, அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×