search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூர் அருகே சாலை விபத்தில் 2 பேர் பலி - 3 ேபர் படுகாயம்
    X

    அரியலூர் அருகே சாலை விபத்தில் 2 பேர் பலி - 3 ேபர் படுகாயம்

    • பள்ளி வாசலில் தொழுகை முடித்துவிட்டு, வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
    • காதர்மொய்தீனின் இரு சக்கர வாகனமும், எதிரே மூன்று பேர் வந்த ஒரு இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகேயுள்ள திடீர் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் காதர்மொய்தீன் (50). பிற்பகல் இவர், தனது மகன் ஷேக்அப்துல்லா நசீர் இஸ்காக் அழைத்துக் கொண்டு அருகிலுள்ள பள்ளி வாசலில் தொழுகை முடித்துவிட்டு, வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே சென்ற போது, இவரது இரு சக்கர வாகனமும், எதிரே மூன்று பேர் வந்த ஒரு இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இதில் பலத்த காயமடைந்த காதர்மொய்தீன், எதிரே இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த ஆங்கியனூர், மேலத்தெருவைச் சேர்ந்த வல்லரசு (26) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    பலத்த காயமடைந்த ஷேக் அப்துல்லா நசீர் இஸ்காக், எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த ஆங்கியனூர் தெற்கு தெருவைச் சேர்ந்த சரவணவேல் (16), ராமநாதபுரம் மாவட்டம், தூத்து வலசை, உச்சிகுழிதெருவைச் சேர்ந்த சந்துரு (15) ஆகியோர் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து கீழப்பழுவூர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    Next Story
    ×