search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூரில் அனுமதியின்றி  மணல் கடத்திய 2 பேர் கைது
    X

    அரியலூரில் அனுமதியின்றி மணல் கடத்திய 2 பேர் கைது

    • சொக்கலிங்கபுரம், பாப்பாக்குடி, காடுவெட்டி ஆகிய பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • அப்போது அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 2 பேரை கைது செய்தனர்.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் சொக்கலிங்கபுரம், பாப்பாக்குடி, காடுவெட்டி ஆகிய பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது காடுவெட்டி அருகே உள்ள மாரியம்மன் கோவில் வழியாக சென்ற 2 மாட்டு வண்டிகளை தடுத்து நிறுத்தினர். விசாரணையில் காடுவெட்டி செங்கால் ஓடையில் இருந்து திருட்டு தனமாக மணல் ஏற்றிக்கொண்டு சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து, காடுவெட்டி மெயின்ரோடு தெருவை சேர்ந்த கண்ணன் (வயது 56), வடக்கு தெருவை சேர்ந்த ராஜேந்திரன் (60) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

    Next Story
    ×