என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய 2 பேர் கைது
    X

    பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய 2 பேர் கைது

    • பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவனூர் கிராமத்தை சேர்ந்தவர் நதியா (வயது 30). இந்தநிலையில் கடந்த 3-ந் தேதி இரவு நதியா தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தபோது அவர்கள் நதியாவின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்தால் தான் உடலை பெற்றுச்செல்வோம் என்று கூறினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்தநிலையில் நதியாவை தற்கொலைக்கு தூண்டியதாக அதே பகுதியை சேர்ந்த பொக்லைன் டிரைவர் மதியழகன் (28), டிராக்டர் டிரைவர் குமரவேல் (28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து நதியாவின் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

    Next Story
    ×