என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அரியலூர் மாவட்டத்தில் புதுமைபெண் திட்டத்தில் 1355 மாணவிகள் பயனடைந்தனர்-கலெக்டர் ரமணசரஸ்வதி தகவல்
- அரியலூர் மாவட்டத்தில் புதுமைபெண் திட்டத்தில் 1355 மாணவிகள் பயனடைந்தனர் என கலெக்டர் ரமணசரஸ்வதி தகவல் தெரிவித்தார்
- புதுமைப் பெண் இரண்டாம் கட்டத் திட்டத்தில் 445 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் பெறுவதற்கு உதவித்தொகைக்கான வங்கி பற்று அட்டை வழங்கப்பட்டுள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் இதுவரை 1,355 மாணவிகள் பயனடைந்த வருவதாக மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது,அரியலூர் மாவட்டத்தில், ஏற்கனவே சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் முதற் கட்டமாக 910 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் பெறுவதற்கு உதவித்தொகைக்கான வங்கி பற்று அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, புதுமைப் பெண் இரண்டாம் கட்டத் திட்டத்தில் 445 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் பெறுவதற்கு உதவித்தொகைக்கான வங்கி பற்று அட்டை வழங்கப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவி கள் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும் அல்லது தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைத் திட்டத்தின் கீழ் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயின்று 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவியர்களாக இருத்தல் வேண்டும்.மாணவிகள் 8 அல்லது 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்புகளில் படித்து பின்னர், முதன்முறையாக உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் படிப்புக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். புதுமைப் பெண் திட்டத்தில், சான்றிதழ் படிப்பு, பட்டயப் படிப்பு, இளங்கலைப் பட்டம், தொழில் சார்ந்த படிப்பு மற்றும் பாரா மெடிக்கல் படிப்பு போன்ற படிப்புகளை பயிலும் மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும். மேலும், முதலாம் ஆண்டிலிருந்து இரண்டாம் ஆண்டு செல்லும் மாணவியரும், இரண்டாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டு செல்லும் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவியர்களும், தொழிற்கல்வியைப் பொருத்தமட்டில், மூன்றாம் ஆண்டிலிருந்து நான்காம் ஆண்டிற்குச் செல்லும் மாணவிகளுக்கும். மருத்துவக் கல்வியைப் பொருத்தமட்டில், நான்காம் ஆண்டிலிருந்து ஐந்தாம் ஆண்டு செல்லும் மாணவியர்களும் இத்திட்டத்தின் கீழ் பயனடைவர் என்று அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்