என் மலர்
உள்ளூர் செய்திகள்

1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிலைகள் பறிமுதல்
- அரியலூர் செங்குணம் கிராமத்தில் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- 2 சிலைகள், 1 கார், மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல்
அரியலூர்,
1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். அரியலூர் மருவத்தூர் அருகே உள்ள செங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் கணேஷ்ராஜா (வயது 54). இவரது நண்பர் அதே ஊரை சேர்ந்த ராமகிருஷ்ணன் (45). இவர்கள் 2 பேரையும் திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று கைது செய்ததாக கூறப்படுகிறது. மேலும், கணேசின் வீட்டிலிருந்து சுமார் 3 அடி உயரமுள்ள 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த 2 சிலைகள் மற்றும் 1 கார், மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
Next Story






