என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
    X

    புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

    புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

    • புகையிலை ஒழிப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
    • புகையிலை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கினர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் உத்தமசோழபுரம் ஊராட்சி பூதங்குடியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.

    முகாமிற்கு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கற்பகம் தலைமை தாங்கினார்.

    சுகாதார ஆய்வாளர் பரமநாதன் முன்னிலை வகித்தார்.

    மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய சமூகப் பணியாளர் மதுமிதா கலந்துகொண்டு புகையிலை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் அதனை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முறைகள் குறித்து விளக்கினர்.

    இதில் பகுதி சுகாதார செவிலியர் பானுமதி, ஊராட்சி செயலர் பாலசுந்தரம் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

    முடிவில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    Next Story
    ×