என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீர்காழியில், போதை ஒழிப்பு பேரணி
    X

    முன்னதாக அனைவரும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    சீர்காழியில், போதை ஒழிப்பு பேரணி

    • விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளை கையில் ஏந்தி பேரணியாக சென்றனர்.
    • போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மதுவிலக்கு அமலாக்கதுறை சார்பில் பொதுமக்களுக்கு போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்களை பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி தலைமை வகித்தார். மயிலாடுதுறை போலீஸ் கூடுதல் துணை சூப்பிரண்டு வேணுகோபால் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். போதை பொருளுக்கு எதிராக வாசகங்கள் எழுதிய பதாகைகளை கையில் ஏந்தி போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து கோஷங்களை எழுப்பியவாறு மாணவர்கள் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் புதிய பேருந்து நிலையம் வந்தடைந்தது. நிகழ்ச்சியில் சீர்காழி (பொறுப்பு) காவல் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்குமார், சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×