search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூரில் போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி
    X

    கடலூரில் போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.

    கடலூரில் போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி

    • கடலூரில் போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.
    • கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணையாக சென்றனர்‌.

    கடலூர்:

    மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஜவான்பவன் சாலையில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமைதாங்கி விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, கலால் உதவி ஆணையர் லூர்துசாமி, கலால் கோட்ட அலுவலர்கள் மகேஷ், ஜெயசீலன், ஜான்சி ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இப்பேரணியில் போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போதை பொருள் கடத்தினால் கடும் தண்டனைக்குரியது என்பதனை வலியுறுத்தி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணையாக சென்றனர்‌.

    பின்னர் பேரணி அண்ணா பாலம், பாரதி சாலை வழியாக கடலூர் டவுன் ஹாலில் முடிவடைந்தது. இதில் போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர், மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் சுப்பையா, மாவட்ட சமூக நல அலுவலர் சித்ரா, கலால்த்துறை ஆய்வாளர்கள் பாஸ்கர், வனஜா, போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, மகளிர் காவல் நிலைய சப் -இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, புனித வளனார் கல்லூரி பேராசிரியர் சந்தானராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×