என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பாளை டக்கரம்மாள்புரத்தில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி
- போதைப் பொருள் இல்லா தமிழகத்தை உருவாக்கும்போது நோக்கில் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து கைது செய்து வருகின்றனர்.
- நெல்லை மாநகர பகுதியிலும் போலீசார் அதிரடியாக போதை பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நெல்லை:
போதைப் பொருள் இல்லா தமிழகத்தை உருவாக்கும்போது நோக்கில் தமிழகம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து கைது செய்து வருகின்றனர்.
நெல்லை மாநகர பகுதியிலும் போலீசார் அதிரடியாக போதை பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் பள்ளி மாணவர்களிடம் போதை பொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் போலீசார் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாளை டக்கரம்மாள்புரம் ஜெயராஜ் அன்னபாக்கியம் பள்ளியில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி தாளாளர் தேவா தலைமை தாங்கினார். அரசு மருத்துவர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் உமா வரவேற்றார்.
இந்நிகழ்ச்சிக்கு நெல்லை மாநகர கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
பின்னர் மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் மாணவ மாணவிகள் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்