search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டை பகுதியில் சிவன் கோவில்களில் அன்னாபிஷேக வழிபாடு
    X

    செங்கோட்டை பகுதியில் சிவன் கோவில்களில் அன்னாபிஷேக வழிபாடு

    • ஐப்பசி மாத பவுர்ணமி நாளில் சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடப்பது வழக்கம்.
    • குலசேகரநாதர் கோவிலில் அன்னத்தினால் சிவலிங்கம் பிடிக்கப்பட்டு அதற்கு சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது.

    செங்கோட்டை:

    அன்னதோஷம் தீர ஐப்பசி பவுர்ணமி நாளில் சிவ தரிசனம் கோடி லிங்கங்கள் பார்த்த பலனை பெற்றுத் தரும் என்ற ஐதீகத்தின் படி ஆண்டு தோறும் ஐப்பசி மாத பவுர்ணமி நாளில் சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் உள்ள சிவன் கோவில் மற்றும் ஆறுமுகசாமி ஒடுக்கம், மலையாளசாமி கோவில் உள்பட பல்வேறு சிவன் கோவில்களில் அன்னாபிஷேக வழிபாடு நடந்தது. செங்கோட்டை குலசேகரநாதர் கோவிலில் அன்னத்தினால் சிவலிங்கம் பிடிக்கப்பட்டு அதற்கு சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது. பின்னர் குவித்து வைக்கப்பட்டிருந்த அன்னம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. விழாவையொட்டி செங்கோட்டை பகுதி சிவன்கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    Next Story
    ×