search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் முதியோர் இல்லத்தில் தங்கி இருந்த மூதாட்டி சாவு
    X

    நெல்லையில் முதியோர் இல்லத்தில் தங்கி இருந்த மூதாட்டி சாவு

    • முதியோர் இல்லத்தில் தங்கி இருந்த மூதாட்டிக்கு்கு நேற்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
    • அவரது மகள் காயத்ரி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    தூத்துக்குடி 3-வது மைல் பகுதியை சேர்ந்தவர் பாலசுந்தரம். இவரது மனைவி விஜயகுமாரி (வயது60). இவருக்கு காயத்ரி என்ற மகள் உள்ளார். அவருக்கு திருமணம் ஆகிவிட்டது.

    இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக ராஜகுமாரி நெல்லை புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் தங்கி இருந்தார். அங்கு அவருக்கு நேற்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜகுமாரி இறந்து விட்டார். இது குறித்து அவரது மகள் காயத்ரி மேலப்பாளையம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×