என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பண்ருட்டி அருகே இறந்தவரின் உடலை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் மோதி முதியவர் பலி
- பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவரின் உடலை ஏற்றிக் கொண்டு பண்ருட்டிக்கு சென்று கொண்டிருந்தார்
- 75 வயது மதிக்கத்தக்க முதியவர் திடீரென சாலையை கடக்க முயன்றார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்தவர் சதீஷ் (வயது 30)ஆம்புலன்ஸ் டிரைவர். இவர்,நேற்று இரவு பண்ருட்டி அடுத்த முத்தாண்டிக்குப்பம் ஓடப்பன்குப்பத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவரின் உடலை ஏற்றிக் கொண்டு பண்ருட்டிக்கு சென்று கொண்டிருந்தார். இரவு சுமார் 8 மணி அளவில் கொஞ்சி குப்பம் அய்யனார் கோவில் அருகே ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக சைக்கிளில் வந்த 75 வயது மதிக்கத்தக்க முதியவர் திடீரென சாலையை கடக்க முயன்றார். அப்போது எதிர்பாராத வகையில் ஆம்புலன்ஸ் சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த முதியவர் அதே ஆம்புலன்சில் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆம்புலன்ஸ் மோதி பலியான முதியவர் கொஞ்சிகுப்பத்தை சேர்ந்த ஏழுமலை (75) எனவும், இவர் அதே பகுதியில் சைக்கிளில் சென்று பாட்டில்கள் பொறுக்கி விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து விபத்து ஏற்படுத்திய ஆம்புலன்சை போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் இருந்த ராமலிங்கத்தின் உடலை வேறு ஒரு ஆம்புலன்சில் ஏற்றி முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்