search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரம் அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்த போதை ஆசாமி கைது
    X

    விழுப்புரம் அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்த போதை ஆசாமி கைது

    • விழுப்புரம் அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்த போதை ஆசாமி கைது செய்யப்பட்டார்.
    • புதுவை மாநிலம் மதகடிப்பட்டி பகுதியில் 2 வாலிபர்கள் ஏறினர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட த்திற்கு புதுவையில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்த வண்ணம் இருக்கும். இந்நிலையில் சம்பவத்தன்று புதுவையில் இருந்து விழுப்புரம் நோக்கி 50 பயணிகளுடன் அரசு பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சை டிரைவர் பார்த்த சாரதி ஓட்டினார். கண்டக்ட ராக உமாநாத் பணியில் இருந்தார். அப்போது புதுவை மாநிலம் மதகடிப்பட்டி பகுதியில் 2 வாலிபர்கள் ஏறினர். அவர்கள் குடித்து விட்டு எந்த நிலையில் இருக்கிறோம் என்று கூட தெரியாமல் போதை தலைக்கேறி இருந்தனர். மேலும் அவர்கள் பஸ்ஸில் ஏரியதிலிருந்து இறங்கும் வரை சத்தம் போடுவது கூச்சல் போடுவது பஸ்ஸில் இருந்த பயணி களை பயமுறுத்து வது உள்ளிட்ட ஒழுங்கீ னமான செயல்களை செய்த னர். மேலும் அவர்கள் பஸ் கண்டக்டர் உமாநாத் இடம் தகராறில் ஈடுபட்டனர். இதன் பின்னர் அந்த 2 போதை வாலிபர்களும் கோலியனூர் கூட்ரோட்டில் இறங்கினர்.

    அதன்பின் பஸ் சிறிது தூரம் சென்றவுடன் இரண்டு வாலிபர்களும் போதையில் அருகில் கிடந்த கல்லை எடுத்து பஸ் பின்பக்க கண்ணாடியை உடைத்தனர். இதனால் பஸ்ஸில் இருந்த பயணிகள் பதறிப் போய் அழறினர். இந்த கல்விச்சில் அதிர்ஷ்ட வசமாக எந்த பயணிக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து பஸ் டிரை வர் கண்டக்டர் வளவனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வளவனூர் சப் இன்ஸ்பெக்டர் பிரபு வழக்கு பதிவு செய்து மொபைல் போன் மூலம் எடுக்கப்பட்ட போட்டோ ஆதாரங்களின் அடிப்ப டையில் தேடி வந்தனர். இந்நிலையில் அவர்கள் கோலியனூர் கூட்ரோடு ராமையன் பாளையம் பகுதி யைச் சேர்ந்த சக்திவேல் (வயது 25), ராசையா (26) என்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் ராசையாவை வலை வீசி தேடி வருகின்றனர். மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×