என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கஜ பூஜை செய்வதற்கு தஞ்சை பெரிய கோவிலுக்கு யானை வழங்க வேண்டும்
    X

    ராஜேஸ்வரன்.

    கஜ பூஜை செய்வதற்கு தஞ்சை பெரிய கோவிலுக்கு யானை வழங்க வேண்டும்

    • தஞ்சை பெரிய கோவிலில் இன்று மாட்டு பொங்கலை முன்னிட்டு மகா நந்திக்கு 2 டன் அளவிலான காய்கறி, பழம், இனிப்பு, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
    • இந்த கோவில் கஜ பூஜை செய்வதற்கு15 வருடங்களாக யானை இல்லை, யானை இல்லாதது மிகப்பெரிய வருத்தத்தை அளிக்கிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரிய கோவிலில் இன்று மாட்டு பொங்கலை முன்னிட்டு மகா நந்திக்கு 2 டன் அளவிலான காய்கறி, பழம், இனிப்பு, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. 108 பசுக்களுக்கு கோ பூஜை நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அப்போது அ.ம.மு.க. மாநகர செயலாளர் ராஜேஸ்வரன் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டு தரிசனம் செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-

    தமிழ்நாடு மக்கள் நோய் நொடியின்றி எல்லா செல்வங்களும் பெற, விவசாயம் செழிக்க, நீர் பற்றாக்குறை இருக்க கூடாது. அனைத்து ஜீவ நாடிகள் நன்றாக வாழ வேண்டும் என கோரிக்கை வைத்து கோ பூஜை சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது.

    தஞ்சை பெரிய கோயில் உலகப் புகழ் பெற்றது .

    இந்த கோவில் கஜ பூஜை செய்வதற்கு15 வருடங்களாக யானை இல்லை.

    யானை இல்லாதது மிகப்பெரிய வருத்தத்தை அளிக்கிறது. தஞ்சை மக்களுக்கும் பெரிய கோயிலுக்கும் புகழ் சேர்க்கும் வகையில் பெரிய கோயிலுக்கு யானை அளிக்குமாறு தமிழக அரசுக்கு தஞ்சை மக்கள் சார்பில் வேண்டுகோள் வைக்கிறேன்.

    தஞ்சை பெரிய கோயிலுக்கு பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் அதிகமாக வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு மாற்று பாதை அமைத்து தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×