என் மலர்
உள்ளூர் செய்திகள்

போத்தனூரில் கிறிஸ்தவ ஆலய உண்டியலை உடைத்து திருட முயற்சி
- சம்பவத்தன்று இரவு புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த கண்காணிப்பு காமிரா இணைப்பை துண்டித்தார்
- ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்
கோவை,
கோவை போத்தனூர் - வெள்ளலூர் ரோட்டில் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இங்கு சம்பவத்தன்று இரவு புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த கண்காணிப்பு காமிரா இணைப்பை துண்டித்தார்.
பின்னர் அங்கிருந்த உண்டியலை உடைத்து திருட முயன்றார். அப்போது அங்கு ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதனை பார்த்த ஆலய நிர்வாகிகள் இது குறித்து போத்தனூர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியலை உடைத்து திருட முயன்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
Next Story






