search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூரில் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
    X

    குடியிருப்போர் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    கடலூரில் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    • கடலூரில் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • பொதுச்செயலாளர் மருதவாணன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

    கடலூர்:

    கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் சார்பில் கெடிலம் ஆற்றில் தனியார் சர்க்கரை ஆலை கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரியும் , மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரியும், கெடிலம் பெண்ணை ஆற்றின் கரைகளை உயர்த்தி வெள்ளத்தில் இருந்து குடியிருப்பு பகுதிகளை பாதுகாக்க கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . ஆர்பாட்டத்திற்கு தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார் . இணைபொதுச்செயலாளர் புருஷோதம்மன் முன்னிலை வகித்தார்.பொதுச்செயலாளர் மருதவாணன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்பாட்டத்தில் கூட்டமைப்பு நிர்வாகிகள் கண்ணபிரான், கோபால், லட்சுமிநாராயணன் , காசிநாதன், ரமணி, கல்யாணகுமார், ராதாகிருஷ்ணன், சரவணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் சுகுமாறன் நன்றி கூறினார்.

    Next Story
    ×