search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. சார்பில் நாளை நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு
    X

    அதிமுக

    அ.தி.மு.க. சார்பில் நாளை நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

    • அ.தி.மு.க. சார்பில் நாளை நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
    • நகராட்சி, மாநகராட்சிகளில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் வரும் 21-ம் தேதிக்கு மாற்றப்பட்டது.

    சென்னை:

    தி.மு.க. அரசின் 18 மாத கால ஆட்சியில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை போன்றவற்றை கண்டித்து அ.தி.மு.க. சார்பில், கழக அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டங்களிலும் கடந்த 9-ந் தேதி அன்று பேரூராட்சிகளிலும், 13-ம் தேதி நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், 14-ம் தேதி ஒன்றியங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அதிமுக தலைமை ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

    மாண்டஸ் புயல் காரணமாக கடந்த 9-ம் தேதி நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வரும் 16-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் நாளை நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் வரும் 21-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.

    Next Story
    ×