என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மின்கம்பியை மிதித்த விவசாய கூலி தொழிலாளி பலி
- மகன் அறிவழகன் என்பவருடைய வயலுக்கு இன்று காலையில் பூச்சி மருந்து அடிக்க சென்றுள்ளார்.
- அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா வேப்பத்தூர் தெற்கு கோழிய தெரு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (58). விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.
இவர் திருவிசநல்லூர் காருடையான் தெருவை சேர்ந்த சம்மந்தம் மகன் அறிவழகன் என்பவருடைய வயலுக்கு இன்று 10-ந்தேதி காலையில் பூச்சி மருந்து அடிக்க சென்றுள்ளார்.
அப்பொழுதுவயலில் அறுந்து கிடந்த மின்கம்பி யை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்தி லேயே கணேசன் பரிதா பமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் அறிவழ கனின் மனைவி மீனா வயலில் பூச்சி மருந்து அடிக்கப்படுகிறதா என்பதை சென்று பார்த்தபோது கணேசன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து திருவிடைமருதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கணேசன் உடலை கைப்பற்றி திருவிடைமருதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் திருவிடைமருதூர் டி.எஸ்பி ஜாபர் சாதிக் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார்.
பலியான கணேசனுக்கு பவானி என்ற மனைவியும், 4மகள்களும் உள்ளனர். 3 மகள்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது.இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்