search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வள்ளியூரில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
    X

    பொதுக்கூட்டத்தில் புறநகர் மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. பேசிய போது எடுத்த படம். 

    வள்ளியூரில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம்

    • வள்ளியூர் திருவள்ளுவர் கலையரங்கில் நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது.
    • நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் திருவள்ளுவர் கலையரங்கில் நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது.

    நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் சீனிவாசன், முன்னாள் எம்.பி. சவுந்தர்ராஜன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் நாரயணபெருமாள், மாநில ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் மைக்கேல் ராய ப்பன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் ஆவரைகுளம் பால்துரை, ஜெயலலிதா பேரவை செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா, ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.பி.கே.செல்வராஜ் ஆகியோர் வரவேற்று பேசினார். தலைமை பேச்சாளர் பல குரல் சந்தானம் சிறப்புரை யாற்றினார்.

    அதைத்தொடர்ந்து இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. பேசுகையில், தி.மு.க. மொத்தம் 534 பொய்யான வாக்குறுதிகளை தந்துள்ளது. இதில் ஒன்றை கூட நிறை வேற்றவில்லை.

    ஆயிரம் ரூபாய் அனைத்து பெண்களுக்கும் தரப்பட வில்லை. தி.மு.க.வினர் பொய்யான வாக்குறுதிகளை தந்து ஏமாற்றியுள்ளனர்.எடப்பாடியார் ஆட்சியை யும், தி.மு.க. ஆட்சியையும் ஒப்பிட்டு பார்த்தோம் என்றால் எடப்பாடியார் ஆட்சிதான் சிறந்ததாகும்.

    நீட் தேர்வுக்கு விலக்கு வராது என்பதை தெரிந்து தான் 7.5 சதவீதத்தை கிராமப்புற ஏழை மாண வர்களுக்கு எடப்பாடியார் கொண்டு வந்தார். ஆனால் தற்போது நீட் விலக்கு எங்கள் இலக்கு என அனை வரையும் ஏமாற்றி வருகிறார்கள்.

    வருகின்ற சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்களாகிய நீங்கள் தான் அ.தி.மு.க.வுக்கு வாக்க ளித்து தி.மு.க. ஆட்சிக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றார்.

    பின்னர் ஏழை பெண்க ளுக்கு இலவச சேலைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி யில் மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜான்சிராணி, மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை தலைவர் சுந்தரேசன், மாவட்ட இளைஞரணி இணை செய லாளர் பாலரிச்சர்டு, பொருளாளர் இந்திரன், எட்வர்ட்சிங் மற்றும்

    தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×