search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
    X

     கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

    • பல்வேறு பகுதிகளில் குப்பைகள் அள்ளப்படாமல் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
    • நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராகவும், தமிழக அரசை கண்டித்தும் அதிமுகவினர் கோஷங்கள் எழுப்பினர்.

    சீர்காழி:

    சீர்காழியில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சீர்காழியில் பழைய பேருந்துநிலையத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் பி.வி.பாரத தலைமை வகித்தார்.

    நகர செயலாளர் வினோத், ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், சந்திரசேகரன், நற்குணன், சிவக்குமார், முன்னாள் எம்எல்ஏ ம.சக்தி முன்னிலை வகித்தனர்.

    மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ் கண்டன உரையாற்றி பேசுகையில், சீர்காழி நகரில் பள்ளிகள், மருத்துவமனை, வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குப்பைகள் அள்ளப்படாமல் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், நகராட்சி நிர்வாகம் சரிவர செயல்படவில்லை எனவும், வரி மற்றும் உயர்த்தி பொதுமக்களை வாட்டி வதைப்பதாக குற்றஞ்சாற்றி கண்டன உரை ஆற்றினார்.

    தொடர்ந்து சீர்காழி நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராகவும், தமிழக அரசை கண்டித்தும் அதிமுகவினர் கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் மாவட்ட துணை செயலாளர் செல்லையன், முன்னாள் நகர செயலாளர் பக்ரிரிசாமி, பேரவை செயலாளர் மணி, நிர்வாகிகள் ரவி சண்முகம், லாட்ஜ் மணி, அகணி மதியழகன், மருதங்குடி அலெக்சாண்டர், கொண்டல் விஜயன், மாலினி, லட்சுமி, அஞ்சம்மாள், வக்கீல்கள் தியாகராஜன், நெடுஞ்செ ழியன், பாலாஜி, அம்சேந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர் நடராஜன், விஜயகுமார் உள்ளிட்ட பல கலந்து கொ ண்டனர். முடிவில் நகர துணை செயலாளர் பரணிதரன் நன்றி கூறினார்.

    Next Story
    ×