search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு அ.தி.மு.க.வினர் வரவேற்பு
    X

    நெல்லை வந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை முன்னாள் எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க. தேர்தல் பிரிவு துணைச்செயலாளருமான இன்பதுரை  வரவேற்ற காட்சி. அருகில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா உள்ளார்.

    நெல்லையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு அ.தி.மு.க.வினர் வரவேற்பு

    • முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று நெல்லை வந்தார்.
    • நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    தமிழக உள்ளாட்சித்துறை முன்னாள் அமைச்சரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான எஸ்.பி. வேலுமணி இன்று நெல்லை வந்தார். சந்திப்பு பகுதியில் அவரை நெல்லை மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் நிர்வாகிகள் வரவேற்றனர்.

    இந்த வரவேற்பு நிகழ்ச்சி அமைப்புச் செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், சுதா பரமசிவன், ஏ.கே.சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் நடை பெற்றது.

    அப்போது அ.தி.மு.க. தேர்தல் பிரிவு இணைச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இன்பதுரை அவருக்கு சால்வை அணிவித்தார். இந்த வரவேற்பு நிகழ்ச்சியின் போது மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, டவுன் கூட்டுறவு வங்கி தலைவர் பால் கண்ணன், பகுதி செயலாளர்கள் காந்தி வெங்கடாசலம், சண்முககுமார், சிந்து முருகன், சின்னத்துரை, பாளை பகுதி மாணவரணி செயலாளர் புஷ்பராஜ் ஜெய்சன், முன்னாள் அரசு வக்கீல் அன்பு அங்கப்பன் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×