search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க மாவட்ட செயலாளர் நேரில் ஆறுதல்
    X

    மயிலாடுதுறை மாவட்ட அ.தி.மு.க செயலாளர் பவுன்ராஜ் ஆறுதல் கூறினார்.

    வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க மாவட்ட செயலாளர் நேரில் ஆறுதல்

    • அணைக்கு வரும் நீர் முழுவதும் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ள காரணத்தால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • வெள்ள நீர் வீடுகளில் சூழ்ந்துள்ளதால் வீடுகளை விட்டு கிராம மக்கள் கால்நடைகளுடன் ஆற்றின் கரையில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    சீர்காழி:

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தொடர்ந்து அணைக்கு வரும் நீர் முழுவதும் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 2 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் கரையோர கிராமமான நாதல்படுகை, முதலை மேடுத்திட்டு பகுதியில் வெள்ள நீர் வீடுகளில் சூழ்ந்துள்ளதால் வீடுகளை விட்டு கிராம மக்கள் கால்நடைகளுடன் ஆற்றின் கரையில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    இதனிடையே பாதிக்கப்பட்ட மக்களை அ.தி.மு.க மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ் சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர நடவடிக்கை மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரட், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வழங்கி மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ் ஆறுதல் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் நற்குணன், மேற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார், சீர்காழி ஒன்றிய செயலாளர்கள் ஏ.கே. சந்திரசேகரன், ஆதமங்கலம் ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.வும் மகளிர் அணி மாவட்ட செயலாளருமான ம.சக்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×