search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

    • விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வண்ணார் பேட்டையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • இதில் கலந்து கொண்ட சில அ.தி.மு.க. நிர்வாகிகள் கழுத்தில் தக்காளி, சாம்பார் வெங்காயம் உள்ளிட்ட சில காய்கறிகளை அணிந்து பங்கேற்றனர்.

    நெல்லை:

    தமிழகத்தில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி, மசாலா பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரியும், தி.மு.க. அரசை கண்டித்தும் நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வண்ணார் பேட்டை செல்லப் பாண்டியன் மேம்பாலம் கீழ் பகுதியில் இன்று கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார்.

    காய்கறி மாலை

    இதில் கலந்து கொண்ட சில அ.தி.மு.க. நிர்வாகிகள் கழுத்தில் தக்காளி, சாம்பார் வெங்காயம் உள்ளிட்ட சில காய்கறிகளை அணிந்து பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் அமைப்புச் செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், சுதா பரமசிவன், ஏ.கே. சீனி வாசன், இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ., மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா, மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் கல்லூர் வேலாயுதம், மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், முன்னாள் எம்.பி. சவுந்தர்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், முன்னாள் துணை மேயர் ஜெகநாதன், பொதுக்குழு உறுப்பினர் கங்கை வசந்தி, செவல் முத்துசாமி, மாவட்ட ஜெயலலிதா பேரவை செய லாளர் ஜெரால்டு, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரிய பெருமாள், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் உவரி ராஜன் கிருபாநிதி, இணை செயலாளர் சிந்தாமணி ராமசுப்பு, மாவட்ட துணை செயலாளர் பள்ளமடை பாலமுருகன், மாவட்ட மகளிரணி செயலாளர் ஜான்சிராணி, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி ஆவரை குளம் பால்துரை, டவுன் கூட்டுறவு வங்கி தலைவர் பால் கண்ணன், இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் முத்துப் பாண்டி, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் சிவந்தி மகா ராஜேந்திரன், ஒன்றிய செய லாளர்கள் முத்துக்குட்டி பாண்டியன், மருதூர் ராம சுப்பிர மணியன், கே.பி.கே. செல்வ ராஜ், அந்தோணி அமலராஜா, பகுதி செய லாளர்கள் சிந்து முருகன், திருத்து சின்னத்துரை, சண்முககுமார், காந்தி வெங்கடாசலம், ஜெனி, வக்கீல் ஜெயபாலன், நெல்லை மாவட்ட ஆவின் பாலக தலைவர் கட்டளை அன்பு, முன்னாள் அரசு வக்கீல் அன்பு அங்கப்பன், மாவட்ட பிரதிநிதி ஈஸ்வரி கிருஷ்ணன், பாளை பகுதி மாணவரணி செயலாளர் புஷ்பராஜ் ஜெய்சன், கவுன்சிலர் சந்திரசேகர், பகுதி இளைஞர் பாசறை சம்சு சுல்தான், பகுதி துணைச்செயலாளர் மாரிசன், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட பொருளாளர் காளிதாஸ் பாண்டியன், பகுதி அவைத்தலைவர் ஆறுமுகம், ஜெயலலிதா பேரவை பகுதி செயலாளர் சீனிமுகமது சேட், விவசாய அணி கனித்துரை மற்றும் நிர்வாகிகள் ஸ்ரீவை சின்ன துரை, டால் சரவணன், தச்சை மாதவன், நத்தம் வெள்ளபாண்டி, பக்கீர் மைதீன், ஆபீஸ் மணி, பூக்கடை சப்பானி முத்து, மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி விக்னேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×