search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விக்கிரமசிங்கபுரத்தில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
    X

    விக்கிரமசிங்கபுரத்தில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

    • அகஸ்தியர்புரம், ராமலிங்கபுரம் உள்ளிட்ட இடங்களில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில் அ.தி.மு.க. நகர செயலாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    விக்கிரமசிங்கபுரத்தில் தெற்கு அகஸ்தியர்புரம், பசுக்கிடைவிளை வடக்கு தெரு, ராமலிங்கபுரம் ஆகிய இடங்களில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் புறநகர் மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு அ.தி.மு.க.வினர் நாடாளுமன்ற தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி அறிவிக்கும் வேட்பாளரை வெற்றி பெற அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. நகர செயலாளர் கண்ணன், பேச்சாளர் மீனாட்சி சுந்தரம், அம்பை ஒன்றிய துணைச் செயலாளர் பிராங்கிளின், கவுன்சிலர்கள் கிறாஸ் இமாக்குலேட், அம்பை மாரிமுத்து, மணிமுத்தாறு நகரச் செயலாளர் ராமையா, நகர இணைச் செயலாளர் மரிய சாந்தா ரோஸ், சிங்கை அருண், அரிச்சந்திரன், அருண் தபசு, வக்கீல்கள் செல்வ ஆண்டணி, ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×