search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை
    X

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

    • இக்கல்லூரியானது ஐ.எஸ்.ஓ. 9001:2015 டி.யு.வி.-ன் சான்றளிக்கப்பட்ட நிறுவனம் ஆகும்.
    • மாணவ-மாணவிகளின் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள், தொழில்நுட்ப கருத்தரங்குகள் நடத்தப்படுகிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    பாடப்பிரிவுகள்

    திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் கட்டிடவியல் துறை (சிவில்), எந்திரவியல் துறை (மெக்கானிக்கல்), கணினி அறிவியல் துறை (சி.எஸ்.இ), மின் மற்றும் மின்னணு துறை (இ.இ.இ), தகவல் தொழில்நுட்ப துறை (ஐ.டி.), மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை (இ.சி.இ) என 6 துறைகளில் இளநிலை பட்டப்படிப்புகளும், முதுநிலை பட்ட மேற்படிப்பில் (எம்.இ.) கணினி அறிவியல் துறை, டிரைவ்ஸ் அமைப்புசார் பொறியியல் (வி.எல்.எஸ்.ஐ.) மற்றும் மேலா ண்மை துறையில் எம்.பி.ஏ. பட்ட மேற்படிப்பும் பயிற்றுவிக்கப்படுகிறது.

    இக்கல்லூரியானது ஐ.எஸ்.ஓ. 9001:2015 டி.யு.வி.-ன் சான்றளிக்கப்பட்ட நிறுவனம் ஆகும். மேலும் டி.சி.எஸ். ஐ.இ.(ஐ) அங்கீகாரம் பெற்றது. தொழில் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி துறையானது இக்கல்லூரிக்கு அறிவியல் ஆய்வுத்துறைக்கான அங்கீகாரத்தை வழங்கி உள்ளது.

    கருத்தரங்குகள்

    கட்டிடவியல் துறையின் ஸ்கேல் அமைப்பு, எந்திரவியல் துறையின் மாஸ் சங்கம், கணினி அறிவியல் துறையின் ஸ்கேன் சங்கம், தகவல் தொழில்நுட்ப துறையின் பயாஸ் சங்கம், மின் மற்றும் மின்னணு துறையின் ஈஸ் சங்கம், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறையின் ஸ்பேஸ் சங்கம், மேலா ண்மை துறையின் ஷேர் சங்கம் சார்பில், மாணவ-மாணவிகளின் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள், தொழில்நுட்ப கருத்தரங்குகள் நடத்தப்படுகிறது.

    இக்கல்லூரி மாணவர்கள் பல்வேறு கருத்தரங்குகளில் பங்கேற்று தொழில்நுட்ப ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்து பல பரிசுகளை வென்றுள்ளனர். தொழில்நுட்ப சங்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக,

    ஒவ்வொரு துறையும் தொழில்சார்ந்த படிப்புகள், தொழில்நுட்ப விரிவுரைகள், திட்டங்கள் மற்றும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு 'கேட்' பயிற்சி ஆகியவற்றை ஏற்பாடு செய்கின்றது.

    மாணவர் சேர்க்கை

    கல்லூரியில் மாணவர்களுக்கு 2 விடுதிகளும், மாணவிகளுக்கு ஒரு விடுதியும் நவீன வசதிகளுடன் உள்ளது.

    மேலும் கல்லூரி மற்றும் விடுதி வளாகம் முழுவதும் வை-பை கணினி இணையதள சேவை வசதி உள்ளது.

    நெல்லை, தூத்துக்குடி, சாயர்புரம், சாத்தான்குளம், திசையன்விளை, நாசரேத், உடன்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும் கல்லூரிக்கு மாணவர்களை அழைத்து வரும் வகையில் பஸ்கள் இயக்கப்படுகிறது.

    டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மேலும் விவரங்களுக்கு www.drsacoe.org என்ற கல்லூரி இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

    இக்கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் படிப்புகள் குறித்த விவரங்களை பெறுவதற்கு drsacoe@aei.edu.in, princyengg@aei.edu.in என்ற மின்னஞ்சல் வாயிலாகவும், கல்லூரி முதல்வரை நேரிலோ அல்லது 04639- 220700, 220702, 220715, 9443246150 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.

    இந்த தகவலை டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×