search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாழப்பாடி பகுதி கோவில்களில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு
    X

    ஏத்தாப்பூர் சமயபுரம் மாரியம்மன் வெற்றிலை அலங்காரத்திலும், பட்டாடை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த புதுப்பாளையம் சக்தி மாரியம்மன்.

    வாழப்பாடி பகுதி கோவில்களில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு

    • சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதி கோவில்களில் ஆடி வெள்ளியையொட்டி சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதி கோவில்களில் ஆடி வெள்ளியையொட்டி சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.

    வாழப்பாடி அருகே பிரசித்திப்பெற்ற பேளூர் தான்தோன்றீஸ்வரர், வாழப்பாடி அக்ரஹாரம் காசி விஸ்வநாதர், பேளூர் அஷ்டபுஜமதன வேணுகோபால சாமி, வாழப்பாடி வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், அக்ரஹாரம் சென்றாயப்பெருமாள், வடபத்திர காளியம்மன் , புதுப்பாளையம் சக்தி மாரியம்மன், ஏத்தாப்பூர் சமயபுரம் மாரியம்மன் மற்றும் வாழப்பாடி ஆத்துமேடு பெரியாண்டிச்சி அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளியையொட்டி சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர். புதுப்பாளையம் சக்தி மாரியம்மன் பட்டாடை அலங்காரத்திலும், ஏத்தாப்பூர் சமயபுரம் மாரியம்மன் வெற்றிலை அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    Next Story
    ×