புதியம்புத்தூர் அம்மன் கோவிலில் ஆடித்திருவிழா

வடக்கு வா செல்வி அம்மன் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த 31-ந் தேதி தொடங்கியது. நேற்று காலை பொங்கல் இடுதலும், மாலை முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சியும், கிராமிய கலை நிகழ்ச்சியும் நடந்தது.
பால்குடம் ஊர்வலம் நடந்தபோது எடுத்த படம்.
பால்குடம் ஊர்வலம் நடந்தபோது எடுத்த படம்.
Published on

புதியம்புத்தூர்:

புதியம்புத்தூர் திரிபுரசுந்தரி அம்மன், வடக்கு வா செல்வி அம்மன் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த 31-ந் தேதி தொடங்கியது. அன்று இரவு திருவிளக்கு பூஜையும், மாகாப்பு பூஜையும் நடந்தது. 1-ந் தேதி காலை பால்குடம் எடுத்தலும், பின்னர் 12 மணிக்கு உச்சிகாலபூஜையும், 4 மணிக்கு தீர்த்தம் எடுத்து சாமி நகர்வலம் வந்தது. இரவு மோகன லட்சுமி குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சி நடந்தது. இரவு மாவிளக்கு எடுத்தலும் ,சாம கொடை பூஜையும் நடந்தது. இரவு சப்ரபவனி வந்தது. நேற்று காலை பொங்கல் இடுதலும், மாலை முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சியும், கிராமிய கலை நிகழ்ச்சி நடந்தது. தொடகந்து அன்னதான நிகழ்ச்சியும் நடந்தது. இன்று (வியாழக்கிழமை) நகைச்சுவை இன்னிசை பட்டிமன்றமும், 4-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மெலோடிஸ் இசை கச்சேரியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com