search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூருக்கு கூடுதல் ரெயில் இயக்க வேண்டும்- தெற்கு ரெயில்வே பொதுமேலாளருக்கு வைகோ கோரிக்கை
    X

    திருச்செந்தூருக்கு கூடுதல் ரெயில் இயக்க வேண்டும்- தெற்கு ரெயில்வே பொதுமேலாளருக்கு வைகோ கோரிக்கை

    • திருவிழா காலங்களில் 50 லட்சம் மக்கள் கூடும் காரணத்தால் கூடுதல் ரெயில் சேவையை இயக்க வேண்டும்.
    • திருச்செந்தூர் ரெயில் நிலையத்தை நவீனப்படுத்த வேண்டு என வைகோ கூறியிருந்தார்.

    தூத்துக்குடி:

    ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ எம்.பி. தெற்கு ரெயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருச்செந்தூர் ரெயில் நிலையத்தின் நடைமேடை யின் நீளத்தை அதிகரிக்கவும், திருச்செந்தூர் ரெயில் நிலையத்தை நவீனப்படுத்தவும் அதிக ரெயில் சேவைகளை இயக்க பொதுமக்கள் மற்றும் ரெயில் பயனாளி களிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகளை தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

    தற்போது, திருச்செந்தூர் 3 நடைமேடைகளை கொண்டுள்ளது. நடைமேடை எண் 1-ல் 18 பெட்டிகளும் மற்ற 2 நடைமேடைகளில் 12 ரெயில் பெட்டிகள் மட்டுமே நிறுத்த முடியும். எனவே, 24 பெட்டி ரெயில்கள் நிறுத்தும் வகையில் நடைமேடை நீளத்தை அதிகரிக்க வேண்டும். கூடுதலாக 2 நடைமேடைகளையும் அமைக்க வேண்டும்

    50 லட்சம் மக்கள் திருச்செந்தூர் முருகன் கோவில் திருவிழா காலங்களில் கூடும் காரணத்தால் கூடுதல் ரெயில் சேவையை இயக்க வேண்டும். எனவே, நடைமேடைகளின் நீளத்தை அதிகப்படுத்துதல், கூடுதலாக 2 நடைமேடைகள் அமைத்தல், திருச்செந்தூர் ரெயில் நிலையத்தை நவீனப்படுத்துதல் ஆகிய இரண்டு பணிகளை விரைந்து மேற்கொண்டு அதிக ரெயில் சேவைகளை இயக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்,

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×