search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோட்டக்குப்பம் அருகே அதிரடி சோதனை: மீன்களுக்குள் மறைத்து வேனில் சாராயம் கடத்தல்
    X

    பறிமுதல் செய்யப்பட்ட சாராய பாக்கெட்டுகளை படத்தில் காணலாம்.

    கோட்டக்குப்பம் அருகே அதிரடி சோதனை: மீன்களுக்குள் மறைத்து வேனில் சாராயம் கடத்தல்

    • போலீசார் கோட்ட க்குப்பம் பகுதியான பெரிய முதலியார் சாவடியில் வாகன தணிக்கையில் ஈடு பட்டனர்.
    • இந்த சாராயம் புதுவையில் இருந்து காஞ்சீபுரத்துக்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.

    விழுப்புரம்:

    புதுவையில் இருந்து விழுப்புரம், திண்டிவனம் வழியாக வேன் மற்றும் மோ ட்டார் சைக்கிளில் சாரா யம் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க ேபாலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா அதிரடி நடவ டிக்கை எடுத்து வருகிறார். என்றாலும் ஒருசிலர் இந்த கடத்தல் சம்பவத்தில் துணிகரமாக ஈடுபட்டு வருகிறார்கள். புதுவையில் இருந்து கோட்டக்குப்பம் வழி யாக சாராயம் கடத்தப்படு வதாக குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெரால்டுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்ப டையில் போலீசார் கோட்ட க்குப்பம் பகுதியான பெரிய முதலியார் சாவடியில் வாகன தணிக்கையில் ஈடு பட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை நடத்தி னர். அந்த வேனின் உள்ளே மீன்கள் இருந்தது. அதற்கு அடியில் சாராய பாக்கெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் வேனுடன் பாக்ெகட் சாராயத்தை பறிமுதல் செய்தனர். அந்த வேனில் 1250 லிட்டர் சாராயம் இருந்தது. இந்த சாராயம் புதுவையில் இருந்து காஞ்சீபுரத்துக்கு கடத்தி செல்வது தெரிய வந்தது. இதுதொடர்பாக காஞ்சீ புரம் மாவட்டம் குன்றத்தூர் பள்ளத்தெருவை சேர்ந்த திருமலை (வயது 45) என்ப வரை போலீசார் கைது செய்தனர். இவர் யாரிடம் இருந்து சாராயம் வாங்கி வந்தார். இதற்கு மூளை யாக இருப்பது யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×