என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைதான மணிகண்டன்
பண்ருட்டியில் அதிரடி ஆபரேசன் கஞ்சா வேட்டையில் வாலிபர் கைது
ைகதான நபர்களிடம் இருந்து கிலோ கணக்கில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
கடலூர்:
தமிழகத்தில் கஞ்சா, குட்கா, போன்ற தடை செய்யப்பட்டபோதைப் பொருள்நடமாட்டத்தை ஒழிக்க தமிழ்நாடுகாவல்துறை ஆபரேஷன் கஞ்சா வேட்டை3.0 நடத்தி வருகின்றனர். இதில் ஏராளமான கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். ைகதான நபர்களிடம் இருந்து கிலோ கணக்கில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
பண்ருட்டி, புதுப்பேட்டை பகுதியில் இன்று போலீசார்நடத்திய கஞ்சா வேட்டையில் ரெட்டிக்குப்பம்பகுதியை சேர்ந்த மணிகண்டன்(வயது 22)என்பவரை புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து ஏராளமான கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
Next Story






